Download this app and upload your videos in your facebook enjoy your best moment
Sunday, 17 December 2017
Friday, 20 October 2017
Thursday, 5 October 2017
Earn money via true balence
Wednesday, 6 September 2017
Comedy full enjoyment|சிரிப்பு 100% இலவசம்
😊😊 சிரிப்பு இலவசம்😊😊
😀ஜோக்.. 😜ஜோக்..
1) "நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?
"நாய்கிட்டதான் கேக்கணும் "
"அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!"😋😋
2) "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு.
"அப்புறம்"
அப்புறம் என்ன........
காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!😊😊
3) "சார், என்ன இது ?"
"கொஸ்டீன் பேப்பர்"
"சார், இது என்ன?"
"ஆன்சர் பேப்பர்"
"என்ன ஒரு அக்கிரமம் சார்,
கொஸ்டீசன் பேப்பர்லே கொஸ்டீன் இருக்கு,
ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!😃😄
4) "எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?"
"நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"😪😰
5)""என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"
"கொஸ்டீன் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!"😊🙃
6) "வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பாருங்க"
"அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே .... எப்படி கிழிப்பே ?"😅😂
7) "நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"
"ஏன் கேக்கறே"
"திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"😄😄
சிரிcha போChe.....
No : 1
நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?
சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!!
No: 2
உன் பேரு என்ன..?
" சௌமியா "
உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?
தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,
No : 3 ( இண்டெர்வியூ.. )
உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?
சுவிஸ்சர்லாந்து..
எங்கே Spelling சொல்லுங்க..
ஐயையோ.. அப்படின்னா " கோவா "
No : 4
( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான். )
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..
வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...
No : 5
நடிகர் simbu : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு
மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு இருக்கேன்..
நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே அது மக்களுக்கு பண்ற பொதுசேவை தானே
No : 6
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..
மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..
டாக்டர்: இது அவருக்கில்லை... உங்களுக்கு..
No : 7 ( கல்யாண மண்டபம்.. )
"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "
" ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!!"
No: 8
அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!
Friday, 1 September 2017
Blue whale|-Game|என்றால் என்ன |எச்சரிக்கை
Blue whale கேம்
என்றால் என்ன?
இது ஒரு எச்சரிக்கை பதிவு.
பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் மொபைலில் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள் என்று கவனியுங்கள்
Blue whale கேம்னதும் ரெண்டு திமிங்கலம் சண்டை போடும்னு தான் நானும் நினச்சேன் ...!!
வெளிய இருந்து பாக்குரப்ப அப்படி தான் எல்லாருக்கும் தோனும் ...!!
ஆனா அங்க தான் இருக்கிறது
Twist,,,,
இது ஒரு ஆன்லைன் கேம் முக்கியமாக தற்கொலைக்கு
தூண்டும் Game,,,.
இது குறித்து பல பேருக்கு
இன்னும் முழுதாக தெரியவில்லை,,,
Game blue print இதுதான்,,,
இந்த கேம் உள்ளே போனதும் பிக் பாஸ்ல கொடுப்பது போல டெய்லி டாஸ்க்கு போலகொடுப்பாங்க,,, .
அங்கே மாரி பந்தை கூடைக்குள்ள போடுவது குதிப்பது தாண்டுவது போல இல்லை,,,,
கத்தி ஊசி ரத்தம் இதான்
Task,,,,,
ஆரம்பத்தில் டாஸ்க் ஈசியா தெரியும் அதனால ஈசியா ஏமாந்துருவாங்க இவ்வளவுதானென்று,,,
அது என்னான்னா ஒரு குண்டூசிய எடுத்து விரல்ல லைட்டா குத்த சொல்லுவாங்க,,,,அதுவும் ஆதாரத்தோட குத்தி அந்த கேம்ல அப்லோட் பண்ணனும் அதான் கேம்.
இந்த கேம் மொத்த டாஸ்க்கு 50 நாளைக்கு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு Task,,,,
கையை கத்தியால கிழிக்கணும் காலை கிழிக்கணும்னு,,,,
கொஞ்ச நாள் போன பிறகு கையிலே திமிங்கலத்தோட படம் வரையனும் கத்தியால,,,,
அப்புறம்,மொட்டை மாடில நின்று போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும் சுவர் மேலே ஏறி,,,,
அப்புறம் கால தொங்க போட்டு உட்கார வேண்டும்.
சுவர் மேல ஒரு காலை தூக்கி
கொண்டு நிற்க வேண்டும்,,,
இப்படி 50 நாட்கள்விளையாடி அவர்கள்சொல்வதையெல்லாம் செய்து போட்டா எடுத்து அனுப்பினால் நீங்க தான் அந்த கேம் வின்னர் ...!!
பரிசு என்ன தெரியுமா ?? கார் பங்களா பலகோடி பரிசு வைரம. 10கிலோ தங்கம் அப்படிலாம் நினைச்சு கூட பார்காதீர்கள். அதான் இல்லை,,,
பரிசு விளையாடுரவங்க உயிர்
ஆமாங்க 50வது நாள் டாஸ்க்கே அதான் மொட்ட மாடி சுவத்துல ஏறி நின்னு கீழ குதிக்கனும் குதிச்சா நீங்க தான் வின்னர் ...!!
எப்படி குதிப்பாங்க இதெல்லாம் சின்னபுள்ளதனமாக இருக்கிறது என்று கேட்பீங்க.,,,
எந்த விஷயத்த எடுத்தாலும் 21 நாள் தொடர்ந்து அதை செய்தால் அதற்கு நாம் அடிமை,,,,
இதான் கேம்.உயிர்கொல்லி பிக் பாஸ் கேம்,,,
மத்தவங்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்,,,, உங்கள் பக்கத்தில் share செய்யுங்கள்.
நிறைய இளைஞர்கள் உயிர் விட்டிருக்கிறார்கள்,,, addict ஆகி,,,
சமீபத்தில் கேரள மாணவன் ஒருவர் இறந்த பிறகுதான் வெளிச்சத்திற்கு வந்தது.
Always be alert and watch what your children are doing in mobile games,,
Sbi -bank balance enquiry without internet
Missed Call Balance Enquiry Number SBI Quick: Missed Call & SMS Banking
STATE BANK OF INDIA - Banker to Every Indian
We are pleased to introduce to you our latest offering that we are sure will simplify your day to day banking
SBI QUICK - MISSED CALL BANKING
You can now get your account balance, mini statement, information on loan products and block your ATM card just by sending an SMS or giving a Missed Call!
It involves a onetime registration.
SMS, 'REGaccount number' to 09223488888 e.g. REG 12345678901 from the mobile number available in bank's records for that particular account.
Facility
SMS
Balance Enquiry
Missed Call or send an SMS 'BAL' to 09223766666
Mini Statement
Missed Call or send an SMS 'MSTMT' to 09223866666
Blocking of ATM Card
Send a SMS 'BLOCKXXXX' to 567676
(XXXX represents last 4 digit of the card number).
Car/Home Loan Enquiry
SMS 'HOME' or 'CAR' to 09223588888.
Full List of Services
SMS 'HELP' to 09223588888
In addition, if you have an Android phone, you can download the SBI Quick app from the Google Play Store. That way you will not need to remember the various keywords and destination mobile numbers. Once installed, you don't need an internet connection to use the app as the communication would happen over SMS or Missed Call.
Warm regards,
Team SBI
Disclaimer: State Bank never sends e-mails and embedded links asking you to update or verify confidential, personal and security details. If you receive such emails/phone calls/SMS, NEVER RESPOND to them and report such matter to the bank at report.phishing@sbi.co.in
10th|12th| ஜியோவில் வேலைவாய்ப்பு -APPLY NOW
Reliance Jio Recruitment JC Digital Repair Services Metro Posts for 10+2/ITI/Diploma/Certification in Device Care Candidates
Jio Job Openings recruitment for JC Digital Repair Services Metro. The eligibility for this job opening is the candidates having 10+2/ITI/Diploma/Certification in Device Care. Interested and qualified candidates should apply online in official website. The link for applying and how to apply Jio job recruitment for JC Digital Repair Services Metro online is given at the bottom of this page.
Jio Job Openings Recruitment Details:
Org Name Reliance Jio Infocomm Limited
Qualification 10+2/ITI/Diploma/Certification in Device Care
Job Location Chennai
Apply mode Online
Name of the Post JC Digital Repair Services Metro
Experience 0-4 Years
Posted Date 21 Aug 2017
About Reliance Jio Infocomm Limited:
Reliance Jio Infocomm Limited, working together as Jio, is a LTE versatile system administrator in Chennai. It is a completely claimed backup of Reliance Industries headquartered in Mumbai, that gives remote 4G LTE benefit organize (without 2G/3G based administrations) and is the main 100% VoLTE (Voice over LTE) operator in the nation, with scope over every one of the 22 telecom circles in Chennai.
The services were first beta-launched to Jio’s partners and employees on 27 December 2015 on the eve of 83rd birth anniversary of late Dhirubhai Ambani, founder of Reliance Industries, and later services were commercially launched on 5 September 2016.
Name of the Post:
Reliance Jio recruitment for JC Digital Repair Services Metro
Eligibility:
The Candidates having the qualification of 10+2/ITI/Diploma/Certification in Device Care
Apply Mode:
Online
Selection Process:
Interview
How to apply JC Digital Repair Services Metro jobs in Reliance Jio Recruitment:
Eligible candidates are Apply through Online on its Official website.
Click this link to view Official Advertisement and Apply this Job https://careers.jio.com/frmjobdescription.aspx?JBTITLE=ZsuYTTfHhfV9omUOKQqrqg==&jbID=pDv3oxOrv0A6UM367nDeVg==&funcCode=NJpFG25Jcmc=
If you have any doubts please add your question as a comment, we will try to clear your doubts as soon as possible
Tuesday, 15 August 2017
Change india education system|tamil
ஒரு சாமானியனின் கேள்விகள்!!!
விநோதமான
விசித்திர உலகம் இது
தவறுகளையே சரி என்னும்
தறுதலை உலகம் இது
ஒரு
பள்ளிக்கூடம் கடக்கிறேன்
குழந்தைகளை
முட்டி போட வைத்து விட்டு
சுதந்திரம் பற்றி
ஒருமணி நேரம்
நீதி போதனை செய்கிறார்
ஓர் ஆசிரியர்
வகுப்புக்கு வெளியே
வானம் பார்த்தவர்களை
பிரம்புகளால் கை குலுக்கி விட்டு
கரும்பலகையில்
ஆகாயம் வரைகிறார்
ஒரு ஆசிரியை
பட்டாம்பூச்சிகளாக
பறந்து திரிய வேண்டிய
பாலகப் பூக்களைச்
சங்கிலியால் கட்டி விட்டு
நந்தவனங்களின்
சௌந்தர்யம் பேசுகிறார்
ஒரு போதகப் பிதா
அஞ்சு பைசாவுக்குப் பயனி்ல்லாத
அல்ஜீப்ரா...
வெக்டார் கால்குலேஷன்
டிஃபரன்ஷியேஷன்
கால்குலஸ்
அவன் வாழ்வதற்கான
ரூட்டை சொல்லித்தராமல்,
ரூட் த்ரி வேல்யூ
சொல்லித்தந்து பலனில்லை...
ப்ராபபல்டி போதித்து விட்டு
வீட்டின்
பால்கணக்கிற்கு
கால்குலேட்டர் தேடச் சொல்கிறார்
ஒரு ராமானுஜர்...
கொள்ளையடிக்க வந்த
கஜினி முகமதை
கோரி முகமதை
கில்ஜி வம்சத்தை
தைமூர் பரம்பரையை
மொகல் மூஞ்சூறை
ஆங்கிலேய ரௌடிகளை
மனப்பாடம் செய்யச் சொல்லி
குழந்தை மூளையை
கெட
வைக்கிறார்
ஒரு
வரலாற்று வாஸ்கோடகாமா...
சும்மா கிடந்த
தவளையை கொலைசெய்ய வைத்து
குழந்தையை
கொலைகாரன் ஆக்குகிறார்
ஒரு
விலங்கியல் வேதாந்திரி
செத்துப் போன
லத்தீன் பெயர்களை
எங்கள் ஊர்ப் பூக்களுக்குச் சொல்லி
செடிகளைத்
தற்கொலை செய்ய வைக்கிறார்
ஒரு
தாவரவியல் சாக்ரடீஸ்...
நிறுத்துங்கள்
எங்கள்
ஆசிரிய தெய்வங்களே
இந்த
இதயமற்ற அரசிடம்
இனியாவது பேசுங்கள்
பிள்ளைகளின்
அறிவுத் திரியில்
தீபமேற்ற ஏதாயினும்
திட்டம் செய்யுங்கள்
அவனவனுக்கு எது வரும்
அதைக்
கற்றுக் கொடுங்கள்...
இவன் உயர் உயர்ந்த
ஜாதிகாரன் இவன் தாழ்ந்த ஜாதிகாரன் என்கின்ற மாயையை கிள்ளி எறிய
கற்று காெடுங்கள்...
அனைவரும்
சமம் என்பதை பாேதியுங்கள்...
வள்ளுவன் கையில்
ஜாவா திணிக்காதீர்கள்...
பில்கேட்ஸ் கையில்
தொல்காப்பியன் செருகாதீர்கள்...
பிள்ளைகள்
மிருதுவானவர்கள்
அவர்களை
மனப்பாடம் செய்யும்
ஏடிஎம் ஆக்காதீர்கள்...
யாரையும்
யாரோடும் ஒப்பிடாதீர்கள்...
முதல் மதிப்பெண் பெற்றவனே
மூளைக்காரன் என்ற
இந்த
முகவரி மாற்றுங்கள்...
மூன்றாம் பரிசு பெற்ற
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்னும் வாழ்கிறது...
முந்திய இரண்டைக்
காணவில்லை...
மூன்றுமணி நேரம்
தின்றதை வாந்தியெடுக்க
அவர்களுக்கு
#இனிமா தராதீர்கள்...
புரியும்படி
சொல்லிக் கொடுங்கள்...
புரியும்வரை
சொல்லிக் கொடுங்கள்...
வீட்டுப்பாடம் என்ற பெயரில்
அவர்களைக்
காட்டுக் குரங்குகளாக மாற்றாதீர்கள்...
ஒன்று கவனித்தீர்களா
காலையில் பள்ளிக்கூடம்
கவலையோடு வரும் அதே குழந்தை தான்
மாலையில் எத்தனை மகிழ்வோடு
ஓடுகிறது பாருங்கள்...
எங்கே பிழை...
எது சரியில்லை
கண்டுபிடியுங்கள்...
உங்களுக்கும்
ஆயிரம் பிரச்சினை...
மறுக்கவில்லை
மகான்களே...
இன்னும்
கரிசனையோடு அணுகுங்கள்
கனவான்களே...
பள்ளிக்கூடத்தால்
துரத்தி விடப்பட்டவன் தான்
எடிசன்...
ஆக
பாடப் புத்தகம் மட்டுமே
வாழ்க்கையில்லை...
சாக்ரடீஸ் என்பவன்
படித்தவனில்லை...
ஆனால்
புத்தகங்களுக்கே
ஆனா ஆவன்னா
சொல்லிக் கொடுத்தவன்...
ஐன்ஸ்டீன்
தன்
மரணப் படுக்கையிலும்
சூத்திரங்கள் எழுதியவன்...
பீத்தோவன்
செவிடன்...
ஆனாலும்
செவிக்கினிய
புதிய புதிய
இசைக்குறிப்பு செய்தவன்...
கண் தொலைந்த பிறகும்
அணுவை ஆய்ந்தவள்
மேரி கியூரி...
உங்கள்
பாடப் புத்தகத்தை
பாராயாணம் செய்தவர்களை விட
உலகம் உணர்ந்தவன்
வென்றிருக்கிறான்...
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவியவன்
படித்தவனில்லை...
அவனிடம்
எம்பிஏக்கள்
க்யூவில் நிற்கிறார்கள்...
வாடகை வீட்டுக் கூரையில்
மெஸ் நடத்தியவன்
சரவண பவன்...
அவன் கிளை இல்லாத
தேசம் இல்லை....
கம்பன்
இளங்கோ
பாரதி
கண்ணதாசன்
எங்கே படித்தனர்...
அவர்கள் படைத்தவைகள்
பல்கலைக்கழகங்களுக்கே
பாடங்களாய்...
இந்த மண்
அறிவாளிகளின் மண்
இந்த மண்
ஞான மாணாக்கர்களின் மண்
அவனவன்
நதி மாதிரி
அவனவனை
அவன் போக்கில் விடுங்கள்
அப்போது தான்
இந்த
நிலம் செழிக்கும்
இந்த
வனம் செழிக்கும்
அவனவனின்
சுய சிந்தனை வளருங்கள்
இந்தத்
தேசத்தைக்
காதலிக்கச் சொல்லிக் கொடுங்கள்
இந்த
மக்களை
அன்பு செய்யச் சொல்லிக் கொடுங்கள்
சாதி மதம் என்கின்ற
பிரிவினை இல்லாத,
ஏழை பணக்காரன்
என்கின்ற பிரிவினை
இல்லாத,
#வேறுபாடு இல்லாத
நேசத்தை உருவாக்கிக் கொடுங்கள்...
தாயை விட உயர்ந்தது தாய்நாடு என்கின்ற தேசப்பற்றை கற்றக்
காெடுங்கள்.
தேசத்திற்காக
உழை த்து உயிரை விட்ட வீரபாண்டியகட்டபாெம்மன்,வஉசிதம்பரனார்,
அம்பேத்கர் நேதாஜி சுபாஷ் சந்திரபாே ஷ்,பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
பகத்சிங்,திருப்பூர்குமரன்,ஜான்சிராணி ஆகியாே ரை பற்றிய பாடங்களை சாெ ல்லி காெடுங்கள்.
பகத்சிங் உணர்வுகள்
பாரெங்கும் பரவிவளரட்டும்.
எல்லோர்க்கும் எல்லாம்
என்கின்ற சூழல் வளர
முயற்சியுங்கள்.
இதை உங்கள் கல்வியில்
உயிரெழுத்தாய்க் கொடுங்கள்
சமூகத்தை நேசிக்கக்
கற்றுக் கொடுங்கள்
பண்பாடு கலாச்சாரம்
பந்தி வையுங்கள்
பெண்களை
மரியாதையோடு பார்க்க
இளைய கண்களுக்கு
எழுதிக் கொடுங்கள்...
ஒவ்வொரு பெண்ணும் தாய் என்று
உணர வையுங்கள்...
ஈவதை
எங்கள் பிள்ளைகளுக்குச்
சொல்லிக் கொடுங்கள்
பரம பிதாக்களே...
அதை விடுத்து
உங்கள் பிள்ளை சரியில்லை என
மாதக் கூட்டத்தில்
ஒப்பாரிப் பத்திரம்
வாசிக்காதீர்கள்...
எங்களை விட அதிக நேரம்
உங்களிடமே இருக்கிறார்
எங்கள் பிள்ளைகள்
எங்கள் குழந்தைகள்
பச்சை மூங்கில்
அதை
புல்லாங்குழலாக்குங்கள்
எங்கள் மழலைகள்
வெறும் நதிதான்
அதை
கடல் சேருங்கள்
நான் ஒரு பாமரன்.
நான் சொன்ன
எல்லாவற்றையும்
கணக்கில் எடுக்காதீர்கள்
எது தேவையோ
அதை மட்டும் எடுங்கள்
இந்தச் சமூகம்
பயன்படும்படி
பலம்படும்படி
வளம்படும்படி
நலம்படும்படி......
அதோ!
இந்தப் பாமரன்
போய்க்கொண்டே இருக்கிறேன்
இந்தச் சமூகத்தைச்
சலவை செய்யும்படி...
Wednesday, 9 August 2017
The motivational story_2tamil
🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.
பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .
குரங்குக்குக் கொஞ்சம் பயம்
வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.
குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது
" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,
எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,
மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.
"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".
குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.
கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.
குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.
🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
*******
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,
🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.
🌼பசிக்கும் போது உணவருந்துங்கள்.
பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.
எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.
என்றும் என்றென்றும் நட்புடன்... -
ஈஸ்வர்
The motivational story_2
🌼 a snake bent on the ground and creeping into the ground.
It was fun for a cute little monkey.
.
🌼 slowly got hold of that snake.
The snake covers the hand of the monkey tightly. The poisoning of the tooth was shown.
Fear of the monkey
Has come.
In a short time, all the gatherings have been gathered.
🌼 But nobody came forward to help Kutik monkey.
🌼 "Ah, this is a poisonous snake.
It was immediately killed.
The snake will put the monkey's grip on it. He can not escape
"The Kutik monkey's ear and talked about each other.
*
The crowd of the atmosphere that has been abandoned by her,
Any snake that is ready to bite at any time,
The fear of death brought all the monkeys away.
"Woe to you, sir
I come to the power of this myself
I got into the net. "
The monkey sounds great.
The time was running. Without food and water, the body is tired.
It has almost come to a collapse. The eye began to darken.
*
🌼 At that time a wise man came that way.
After seeing the situation of the monkey, he realized what happened. Coming closer to the monkey.
*
As soon as he left behind, he had a little hope of a man coming towards him.
He came closer and said, "How long does it take to snatch the snake and put it down?"
🌼what would I do if I left the serpent?"
He repeatedly said, "The snake is very long and dumb down." The monkey who heard the word licked the grip and put it down the serpent.
With The snake was already dead in the monkey's grip. Is not it?
*
Life came to life. He was grateful to him and said, "Never mind this foolishness."
*
We are crying out to be able to hold the dead snake in our mind.
Get rid of them.
*******
Be happy,
🌼 Every bad character will create every disease
Heart and pruritus can cause cardiovascular diseases
Stomach and tragedy can cause stomach ailments
Disease and crying can cause respiratory diseases
🌼 and doubt suspect kidney diseases
🌼 Erotic and angry can cause liver ailments
The desire for peace is to heal everything.
Healthy thoughts come from the physical body. Appreciate the body's needs.
Feed while eating.
If you ignore hunger, the hunger will ignore you.
Do not always ignore the body's invitation.
And forever friendship ... -
Eswar
The best life story |fact of life story
படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:
படிக்கும் போது பாருங்கள், உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...
சம்பவம்-1
24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.
ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....
மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்
"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"
அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்...
"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...
என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம்.
சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.
'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை போடவேண்டாம்.
சம்பவம்-2
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..
அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...
உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..
அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.
சம்பவம்-3
செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.
வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."
ஒரு கட்டு கீரை என்ன விலை....?""
"ஐந்து ரூபாய்"
ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான் தருவேன்.
மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"
"இல்லம்மா வராதும்மா"
அதெல்லாம் முடியாது.
மூன்று ரூபாய் தான்
பேரம் பேசுகிறாள் அந்த தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு
"மேல ஒரு ரூபாய் போட்டு
கொடுங்கம்மா" என்கிறாள்"
முடியவே முடியாது. கட்டுக்கு மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு
"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு பன்னிரண்டு ரூபாயை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"
இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்"
"சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..
திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"
என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..
"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
முப்பது ரூபாய் வருதும்மா.....?
என்று கேட்கஅதற்கு அந்த தாய்,
"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.
இது தான் உண்மையில் மனித நேயம் ......
சம்பவம் 4
மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.
சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...
திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.
கணவர் வேகமாக ஓடினார்.
கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.
மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.
அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...
இருட்டில் எதுவும் தெரியவில்லை.
மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...
தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.
கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.
அவளுக்கு அழுகையாய் வந்தது.
இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.
மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.
பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.
ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...
கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.
அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.
சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்...
ஆனால்
உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.
தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.
இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?
நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.
அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.
வாழ்க்கை பாடத்தில் நிறைய கற்று கொள்ளலாம்.
எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.
" Be Positive Always"
SIMPLEPAY APP PRIVACY POLICY
Privacy Policy Simple pay team built the Simple pay app as a Free app. This SERVICE is provided by Simple pay team at no cost and is intend...
-
**Privacy Policy** Team Tamilallinall built the Paytruck app as a Free app. This SERVICE is provided by Team Tamilallinall at no cost and is...
-
Privacy Policy Simple pay team built the Simple pay app as a Free app. This SERVICE is provided by Simple pay team at no cost and is intend...
-
Privacy Policy Paygun built the Paygun app as a Free app. This SERVICE is provided by Paygun at no cost and is intended for use as is. This ...