Tuesday 15 August 2017

Change india education system|tamil

ஒரு சாமானியனின் கேள்விகள்!!!

விநோதமான
விசித்திர உலகம் இது

தவறுகளையே  சரி என்னும்
தறுதலை உலகம் இது

ஒரு
பள்ளிக்கூடம் கடக்கிறேன்

குழந்தைகளை
முட்டி போட வைத்து விட்டு
சுதந்திரம் பற்றி
ஒருமணி நேரம்
நீதி போதனை செய்கிறார்
ஓர் ஆசிரியர்

வகுப்புக்கு வெளியே
வானம் பார்த்தவர்களை
பிரம்புகளால் கை குலுக்கி விட்டு
கரும்பலகையில்
ஆகாயம் வரைகிறார்
ஒரு ஆசிரியை

பட்டாம்பூச்சிகளாக
பறந்து திரிய வேண்டிய
பாலகப் பூக்களைச்
சங்கிலியால் கட்டி விட்டு
நந்தவனங்களின்
சௌந்தர்யம் பேசுகிறார்
ஒரு போதகப் பிதா

அஞ்சு பைசாவுக்குப் பயனி்ல்லாத
அல்ஜீப்ரா...

வெக்டார் கால்குலேஷன்

டிஃபரன்ஷியேஷன்
கால்குலஸ்

அவன் வாழ்வதற்கான
ரூட்டை சொல்லித்தராமல்,
ரூட் த்ரி வேல்யூ
சொல்லித்தந்து பலனில்லை...

ப்ராபபல்டி போதித்து விட்டு
வீட்டின்
பால்கணக்கிற்கு
கால்குலேட்டர் தேடச் சொல்கிறார்
ஒரு ராமானுஜர்...

கொள்ளையடிக்க வந்த
கஜினி முகமதை
கோரி முகமதை
கில்ஜி வம்சத்தை
தைமூர் பரம்பரையை
மொகல் மூஞ்சூறை
ஆங்கிலேய ரௌடிகளை
மனப்பாடம் செய்யச் சொல்லி
குழந்தை மூளையை
கெட
வைக்கிறார்
ஒரு
வரலாற்று வாஸ்கோடகாமா...

சும்மா கிடந்த
தவளையை கொலைசெய்ய வைத்து
குழந்தையை
கொலைகாரன் ஆக்குகிறார்
ஒரு
விலங்கியல் வேதாந்திரி

செத்துப் போன
லத்தீன் பெயர்களை
எங்கள் ஊர்ப் பூக்களுக்குச் சொல்லி
செடிகளைத்
தற்கொலை செய்ய வைக்கிறார்
ஒரு
தாவரவியல் சாக்ரடீஸ்...

நிறுத்துங்கள்
எங்கள்
ஆசிரிய தெய்வங்களே

இந்த
இதயமற்ற அரசிடம்
இனியாவது பேசுங்கள்

பிள்ளைகளின்
அறிவுத் திரியில்
தீபமேற்ற ஏதாயினும்
திட்டம் செய்யுங்கள்

அவனவனுக்கு எது வரும்
அதைக்
கற்றுக் கொடுங்கள்...

இவன் உயர் உயர்ந்த
ஜாதிகாரன் இவன் தாழ்ந்த ஜாதிகாரன் என்கின்ற மாயையை கிள்ளி எறிய
கற்று காெடுங்கள்...

அனைவரும்
சமம் என்பதை பாேதியுங்கள்...

வள்ளுவன் கையில்
ஜாவா திணிக்காதீர்கள்...

பில்கேட்ஸ் கையில்
தொல்காப்பியன் செருகாதீர்கள்...

பிள்ளைகள்
மிருதுவானவர்கள்
அவர்களை
மனப்பாடம் செய்யும்
ஏடிஎம் ஆக்காதீர்கள்...

யாரையும்
யாரோடும் ஒப்பிடாதீர்கள்...

முதல் மதிப்பெண் பெற்றவனே
மூளைக்காரன் என்ற
இந்த
முகவரி மாற்றுங்கள்...

மூன்றாம் பரிசு பெற்ற
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்னும் வாழ்கிறது...

முந்திய இரண்டைக்
காணவில்லை...

மூன்றுமணி நேரம்
தின்றதை வாந்தியெடுக்க
அவர்களுக்கு
#இனிமா தராதீர்கள்...

புரியும்படி
சொல்லிக் கொடுங்கள்...

புரியும்வரை
சொல்லிக் கொடுங்கள்...

வீட்டுப்பாடம் என்ற பெயரில்
அவர்களைக்
காட்டுக் குரங்குகளாக மாற்றாதீர்கள்...

ஒன்று கவனித்தீர்களா

காலையில் பள்ளிக்கூடம்
கவலையோடு வரும் அதே குழந்தை தான்
மாலையில் எத்தனை மகிழ்வோடு
ஓடுகிறது பாருங்கள்...

எங்கே பிழை...

எது சரியில்லை
கண்டுபிடியுங்கள்...

உங்களுக்கும்
ஆயிரம் பிரச்சினை...

மறுக்கவில்லை
மகான்களே...

இன்னும்
கரிசனையோடு அணுகுங்கள்
கனவான்களே...

பள்ளிக்கூடத்தால்
துரத்தி விடப்பட்டவன் தான்
எடிசன்...

ஆக
பாடப் புத்தகம் மட்டுமே
வாழ்க்கையில்லை...

சாக்ரடீஸ் என்பவன்
படித்தவனில்லை...

ஆனால்
புத்தகங்களுக்கே
ஆனா ஆவன்னா
சொல்லிக் கொடுத்தவன்...

ஐன்ஸ்டீன்
தன்
மரணப் படுக்கையிலும்
சூத்திரங்கள் எழுதியவன்...

பீத்தோவன்
செவிடன்...
ஆனாலும்
செவிக்கினிய
புதிய புதிய
இசைக்குறிப்பு செய்தவன்...

கண் தொலைந்த பிறகும்
அணுவை ஆய்ந்தவள்
மேரி கியூரி...

உங்கள்
பாடப் புத்தகத்தை
பாராயாணம் செய்தவர்களை விட
உலகம் உணர்ந்தவன்
வென்றிருக்கிறான்...

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவியவன்
படித்தவனில்லை...

அவனிடம்
எம்பிஏக்கள்
க்யூவில் நிற்கிறார்கள்...

வாடகை வீட்டுக் கூரையில்
மெஸ் நடத்தியவன்
சரவண பவன்...

அவன் கிளை இல்லாத
தேசம் இல்லை....

கம்பன்
இளங்கோ
பாரதி
கண்ணதாசன்
எங்கே படித்தனர்...

அவர்கள் படைத்தவைகள்
பல்கலைக்கழகங்களுக்கே
பாடங்களாய்...

இந்த மண்
அறிவாளிகளின் மண்

இந்த மண்
ஞான மாணாக்கர்களின் மண்

அவனவன்
நதி மாதிரி

அவனவனை
அவன் போக்கில் விடுங்கள்

அப்போது தான்
இந்த
நிலம் செழிக்கும்
இந்த
வனம் செழிக்கும்

அவனவனின்
சுய சிந்தனை வளருங்கள்

இந்தத்
தேசத்தைக்
காதலிக்கச் சொல்லிக் கொடுங்கள்

இந்த
மக்களை
அன்பு செய்யச் சொல்லிக் கொடுங்கள்

சாதி மதம் என்கின்ற
பிரிவினை இல்லாத,
ஏழை பணக்காரன்
என்கின்ற பிரிவினை
இல்லாத,
#வேறுபாடு இல்லாத
நேசத்தை  உருவாக்கிக் கொடுங்கள்...

தாயை விட உயர்ந்தது தாய்நாடு என்கின்ற   தேசப்பற்றை கற்றக்
காெடுங்கள்.

தேசத்திற்காக
உழை த்து உயிரை விட்ட வீரபாண்டியகட்டபாெம்மன்,வஉசிதம்பரனார்,
அம்பேத்கர் நேதாஜி சுபாஷ் சந்திரபாே ஷ்,பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
பகத்சிங்,திருப்பூர்குமரன்,ஜான்சிராணி ஆகியாே ரை பற்றிய பாடங்களை சாெ ல்லி காெடுங்கள்.

பகத்சிங் உணர்வுகள்
பாரெங்கும் பரவிவளரட்டும்.

எல்லோர்க்கும் எல்லாம்
என்கின்ற சூழல்  வளர
முயற்சியுங்கள்.

இதை உங்கள் கல்வியில்
உயிரெழுத்தாய்க் கொடுங்கள்

சமூகத்தை நேசிக்கக்
கற்றுக் கொடுங்கள்

பண்பாடு கலாச்சாரம்
பந்தி வையுங்கள்

பெண்களை
மரியாதையோடு பார்க்க
இளைய கண்களுக்கு
எழுதிக் கொடுங்கள்...

ஒவ்வொரு பெண்ணும் தாய் என்று
உணர வையுங்கள்...

ஈவதை
எங்கள் பிள்ளைகளுக்குச்
சொல்லிக் கொடுங்கள்
பரம பிதாக்களே...

அதை விடுத்து
உங்கள் பிள்ளை சரியில்லை என
மாதக் கூட்டத்தில்
ஒப்பாரிப் பத்திரம்
வாசிக்காதீர்கள்...

எங்களை விட அதிக நேரம்
உங்களிடமே இருக்கிறார்
எங்கள் பிள்ளைகள்

எங்கள் குழந்தைகள்
பச்சை மூங்கில்
அதை
புல்லாங்குழலாக்குங்கள்

எங்கள் மழலைகள்
வெறும் நதிதான்
அதை
கடல் சேருங்கள்

நான் ஒரு பாமரன்.

நான் சொன்ன
எல்லாவற்றையும்
கணக்கில் எடுக்காதீர்கள்

எது தேவையோ
அதை மட்டும் எடுங்கள்
இந்தச் சமூகம்
பயன்படும்படி
பலம்படும்படி
வளம்படும்படி
நலம்படும்படி......

அதோ!
இந்தப் பாமரன்
போய்க்கொண்டே இருக்கிறேன்
இந்தச் சமூகத்தைச்
சலவை செய்யும்படி...

Thursday 10 August 2017

Wednesday 9 August 2017

The motivational story_2tamil

🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.

பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .

குரங்குக்குக் கொஞ்சம் பயம்
வந்து விட்டது.

கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.

குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது

" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,

எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , 

மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.

"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".

குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.

கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.

குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.

🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.

அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
*******
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,

🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்

🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

🌼பசிக்கும் போது உணவருந்துங்கள்.

பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.

எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.   

என்றும் என்றென்றும் நட்புடன்... -
   
                                         ஸ்வர்

The motivational story_2

🌼 a snake bent on the ground and creeping into the ground.

It was fun for a cute little monkey.
.
🌼 slowly got hold of that snake.

The snake covers the hand of the monkey tightly. The poisoning of the tooth was shown.

Fear of the monkey
 Has come.

In a short time, all the gatherings have been gathered.

🌼 But nobody came forward to help Kutik monkey.

🌼 "Ah, this is a poisonous snake.
It was immediately killed.

The snake will put the monkey's grip on it. He can not escape

"The Kutik monkey's ear and talked about each other.
*
The crowd of the atmosphere that has been abandoned by her,

Any snake that is ready to bite at any time,

The fear of death brought all the monkeys away.

"Woe to you, sir
I come to the power of this myself
 I got into the net. "
 
The monkey sounds great.
The time was running. Without food and water, the body is tired.

 It has almost come to a collapse. The eye began to darken.
*
🌼 At that time a wise man came that way.

After seeing the situation of the monkey, he realized what happened. Coming closer to the monkey.
*
As soon as he left behind, he had a little hope of a man coming towards him.

He came closer and said, "How long does it take to snatch the snake and put it down?"

🌼what would I do if I left the serpent?"
 
He repeatedly said, "The snake is very long and dumb down." The monkey who heard the word licked the grip and put it down the serpent.

With The snake was already dead in the monkey's grip. Is not it?
*
Life came to life. He was grateful to him and said, "Never mind this foolishness."

*
We are crying out to be able to hold the dead snake in our mind.

Get rid of them.
*******
Be happy,

 🌼 Every bad character will create every disease

Heart and pruritus can cause cardiovascular diseases

Stomach and tragedy can cause stomach ailments

Disease and crying can cause respiratory diseases

🌼 and doubt suspect kidney diseases

🌼 Erotic and angry can cause liver ailments

The desire for peace is to heal everything.

Healthy thoughts come from the physical body. Appreciate the body's needs.

Feed while eating.

If you ignore hunger, the hunger will ignore you.

Do not always ignore the body's invitation.

And forever friendship ... -
                                Eswar

     

The best life story |fact of life story

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...

சம்பவம்-1

24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...

இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"

அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்...

"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே.,  உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம்.

சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை போடவேண்டாம்.

சம்பவம்-2   

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..

அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...

பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..

தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...

உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....

நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..

அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.

எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.

சம்பவம்-3 

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.

வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."

ஒரு கட்டு கீரை என்ன விலை....?""

"ஐந்து ரூபாய்"

ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான்  தருவேன்.

மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"

"இல்லம்மா வராதும்மா"

அதெல்லாம் முடியாது.

மூன்று ரூபாய் தான்

பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு

"மேல ஒரு ரூபாய் போட்டு
கொடுங்கம்மா" என்கிறாள்"

முடியவே முடியாது. கட்டுக்கு  மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு

"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு  பன்னிரண்டு ரூபாயை  வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"

இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்"

"சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..

திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"

என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..

"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
முப்பது ரூபாய் வருதும்மா.....?

என்று கேட்கஅதற்கு அந்த தாய்,

"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.

இது தான் உண்மையில் மனித நேயம் ......

சம்பவம் 4

மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...

திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.

கணவர் வேகமாக ஓடினார்.

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.

மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.

அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...

இருட்டில் எதுவும் தெரியவில்லை.

மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.

கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.

அவளுக்கு அழுகையாய் வந்தது.

இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...

கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்...

ஆனால்

உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.

தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.

தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?

நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.

அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.

வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம்.

எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.

"  Be Positive Always"

Tuesday 8 August 2017

New tamil comedy

#எப்பவுமே ட்ரைவிங் பண்டறப்ப நான் போன் வந்தா அட்டென்ட் பண்டறதில்ல...

#புது நெம்பர்...

கால் ஃபுல் ரிங் வந்து கட்டாயிடிச்சி...

வண்டிய லெஃப்ட்ல அணைச்சி நிப்பாட்டி யார் கால்ன்னு பார்க்க போன ஆன் பண்ண எடுத்தன்...

ஆனா... அதுக்குள்ள அதே நெம்பர் கால்...

"ஏங்க... நான் தான் பேசறன்...
போன்ல பேலன்ஸ் இல்ல... பக்கத்து வீட்டு விமலாக்கா போன்லேர்ந்து பேசுறன்..."

சொன்னவள் பேச ஆரம்பிச்சா...

லைட்டா அழுதா...

என்கிட்ட மன்னிப்பு கேட்டா...

அழும் போதே,

'இனிமே வாழ்நாள் முழுசும் உங்கள்ட்ட சண்டையே போட மாட்டேங்க....

' இனிமே நீங்க என்ன சொன்னாலும் செய்வேன்....

'என்ன சொன்னாலும் கேட்பேன்....

எனக்கு மனசு ஒரு மாதிரியாவ...

என்ன சொல்ட்றதுன்னே தெரியாம திகைச்சி நிக்க...

அமைதியாக இருந்த என்கிட்ட...

"தெரியும் இன்னும் உங்களுக்கு என்மேல உள்ள கோவம் போயிருக்காதுதான்... உங்க இடத்துல நான் இருந்தாலும் இப்புடித்தான் இருப்பன்..."

பேசியவ...'சரிங்க... நான் வைக்கிறன்...'ன்னு போன வச்சிட்டா...

நான் அப்புடியே ரொம்ப உணர்வுப்பூர்வமா கேட்டுட்டே இருந்தேன்...

ரொம்ப பிரமாதமா இருந்துச்சி அந்த உணர்வு...

பத்து டிஜிட் நம்பர்ல ஏதோ ஒரு நம்பர மாத்தி போட்டுர்க்கா...பாவம்...

ஆனா...

யாரோட மனைவின்னு தெரில...

'ம்ம்... அவன் குடுத்து வச்சவன்...' 

Central Railway Recruitment 2017

Central Railway Recruitment 2017
   
Central Railway Recruitment 2017 | Staff Nurse, Radiographer, Lab Superintendent, Pharmacist & Health Inspector | Total Vacancies 30 | Walk-in Date: August 14, 16 & 17 | Application Form @ cr.indianrailways.gov.in

Central Railway Recruitment 2017 – Central Railway (CR), Mumbai division is going to conduct Walk-in Interview for the post of Staff Nurse, Radiographer, Lab Superintendent, Pharmacist and Health Inspector. Particularly, 30 vacancies are allotted for these posts. Eligible candidates attend Walk-in Interview as per the schedule. Candidates download application form from the central railway official site i.e. cr.indianrailways.gov.in.

Before attend the interview, candidates should go through the eligibility criteria in CR official notification. In order to apply for this job, Candidates should attend walk-in interview on the given dates. While attending interview candidates should carry necessary documents. This Page explains Central Railway Recruitment 2017 in brief.

Central Railway shortly CR is one of the seventeen railway zones in India. Headquarter of CR is located in Mumbai. CR has been operating since 1951. Central Railway Zone consists of divisions such as Mumbai, Bhusaval, Pune, Solapur and Nagpur. NCR Zone covers the regions of Maharashtra.

Details of Central railway Recruitment 2017

Organization Name: Central Railway

Employment Category: Railway Jobs / Central Govt. Jobs

Total No. of Vacancies: 30

Job Location: Maharashtra

Vacancy Details of Central Railway Recruitment 2017

Name of the PostVacanciesRemuneration/Month
Staff Nurse20Rs. 21,190/-
Lab Technician/Assistant01Rs. 10,970/-
Pharmacist02Rs. 12,190/-
Radiographer04Rs. 12,190/-
Health Inspector02Rs. 20,570/-
Lab Superintendent01Rs. 20,570/-
Eligibility criteria for CR Para Medical Posts

Educational Qualification

10+2/DMLT/Diploma/Bachelor Degree in relevant discipline from a recognized institute.
However, check official notification for post wise educational qualification.
Age Limit

Age limit varies for posts.
However, check official notification for post wise age limit and relaxation.
Selection Process

Walk-in Interview
How to attend CR Para Medical Posts Walk-in Interview

Go to official website -> News & Recruitment-> Recruitment-> Notifications.
Find the advertisement and then read the notification carefully.
Check whether you are eligible and then prepare to attend walk-in.
Download application format from the official site to carry for the interview.
Also carry documents such as original mark sheets and certificates to the Interview.
Particularly check official notification for necessary documents to carry for Walk-in.
After all attend interview between 10:00 Hours and 13:00 Hours.
Interview Schedule

Name of the PostInterview DateVenue
Staff Nurse14.08.2017Central Railway Auditorium, Parcel Building, Between Platform No. 13 & 14, Chhatrapati Shivaji Maharaj Terminus, Mumbai – 400001
Radiographer, Lab Superintendent & Lab Technician16.08.2017
Pharmacist & Health Inspector17.08.2017Recruitment Section, Central Railway, Personnel Branch, Divisional Rly. Manager’s Office, 3rd Floor, Annex Building, Chhatrapati Shivaji Maharaj Terminus, Mumbai – 400001
Click here to download Official Notification>>

Note: – Candidates willing to secure a job particularly in Central Railway keep check this page regularly. Additionally, check for latest and upcoming railway jobs here.

Wednesday 2 August 2017

Tamil motivational message-1

GOOD MOTIVATION

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து…”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு

SIMPLEPAY APP PRIVACY POLICY

Privacy Policy  Simple pay team built the Simple pay app as a Free app. This SERVICE is provided by Simple pay team at no cost and is intend...