#எப்பவுமே ட்ரைவிங் பண்டறப்ப நான் போன் வந்தா அட்டென்ட் பண்டறதில்ல...
#புது நெம்பர்...
கால் ஃபுல் ரிங் வந்து கட்டாயிடிச்சி...
வண்டிய லெஃப்ட்ல அணைச்சி நிப்பாட்டி யார் கால்ன்னு பார்க்க போன ஆன் பண்ண எடுத்தன்...
ஆனா... அதுக்குள்ள அதே நெம்பர் கால்...
"ஏங்க... நான் தான் பேசறன்...
போன்ல பேலன்ஸ் இல்ல... பக்கத்து வீட்டு விமலாக்கா போன்லேர்ந்து பேசுறன்..."
சொன்னவள் பேச ஆரம்பிச்சா...
லைட்டா அழுதா...
என்கிட்ட மன்னிப்பு கேட்டா...
அழும் போதே,
'இனிமே வாழ்நாள் முழுசும் உங்கள்ட்ட சண்டையே போட மாட்டேங்க....
' இனிமே நீங்க என்ன சொன்னாலும் செய்வேன்....
'என்ன சொன்னாலும் கேட்பேன்....
எனக்கு மனசு ஒரு மாதிரியாவ...
என்ன சொல்ட்றதுன்னே தெரியாம திகைச்சி நிக்க...
அமைதியாக இருந்த என்கிட்ட...
"தெரியும் இன்னும் உங்களுக்கு என்மேல உள்ள கோவம் போயிருக்காதுதான்... உங்க இடத்துல நான் இருந்தாலும் இப்புடித்தான் இருப்பன்..."
பேசியவ...'சரிங்க... நான் வைக்கிறன்...'ன்னு போன வச்சிட்டா...
நான் அப்புடியே ரொம்ப உணர்வுப்பூர்வமா கேட்டுட்டே இருந்தேன்...
ரொம்ப பிரமாதமா இருந்துச்சி அந்த உணர்வு...
பத்து டிஜிட் நம்பர்ல ஏதோ ஒரு நம்பர மாத்தி போட்டுர்க்கா...பாவம்...
ஆனா...
யாரோட மனைவின்னு தெரில...
'ம்ம்... அவன் குடுத்து வச்சவன்...'
No comments:
Post a Comment